சாத்தான்குளம் தந்தை, மகன் சாவுக்கு காரணமானவர்களை விடக்கூடாது; ரஜினி ஆவேசம்
1 min readFather and son are not to be blamed for death; Rajini is angry
1-7-2020
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சாவுக்கு காரணமானவர்களை சும்மாவிடக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சாத்தான்குளம் சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விறகு கடை வைத்திருந்த ஜெயராஜ், செல்போன் கடை வைத்திருந்த அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு புகார்கள் கூறப்பட்டுள்ளது. ஊரங்கு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செல்போன் கடையை அடைக்கவில்லை என்று கூறி அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீஸ் நண்பர்கள் உதவியுடன் சரமாரியாக அடித்ததாகவும் அதன்பின் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் இறந்துபோனார்கள்.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியில் கட்சியினர், வியாபாரிகள், சமூக நல அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டு தானே விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
ரஜினி ஆவேசம்
இந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-
தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது.
அவர்களை சத்தியமாகவிடவேகூடாது
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது.சத்தியமா விடவேக்கூடாது
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.