ஓடும் ரயிலில் நள்ளிரவில் நடிகையிடம் அத்து மீறிய நபர்
1 min readகுழந்தை நட்சத்திரமாக காசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சனுஷா(Sanusha). மலையாள சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வருகிறார். தமிழிலும் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த கொடிவீரன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சனுஷா தனக்கு ரயிலில் நடந்த வன்கொடுமை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. ஒருநாள் நள்ளிரவில் ரயிலில் படப்பிடிப்பிற்காக பயணம் செய்து கொண்டிருந்தார் நடிகை சனுஷா.
அப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சனுஷா தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரது அருகே வந்து உதட்டை தடவி கொண்டே இருந்தாராம். தூக்கத்திலிருந்து விழித்து பார்த்த போது பயந்து விட்டாராம்.
உடனடியாக கத்தி கூச்சலிட்டுள்ளார் சனுஷா. ஆனால் பாவம், அருகில் இருந்தவர்கள் யாருமே எழுந்து ஏன் என்னாச்சு என்று கூட என கேட்கவில்லையாம். பிரபலமான நடிகையான எனக்கே சப்போர்ட் செய்ய யாரும் வராத நிலையில் சாதாரண பெண்களுக்கு எப்படி சப்போர்ட் செய்வார்கள் என வருத்தப்பட்டாராம்.
பின்னர் டி டி ஆரை வரவழைத்து அந்த நபரை போலீசில் ஒப்படைத்து விட்டார்கள். உடன் வந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் அவருக்கு உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.