May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

பேட்டையில் தொட்டிலில் ஊஞ்சலாடிய சிறுவன் பலி

1 min read
Seithi Saral featured Image

3.7.2020

The boy who swam in the cradle kills

நெல்லை பேட்டையை அடுத்த செந்தமிழ்நகரை சேர்ந்தவர் முருகன், கார் டிரைவர். இவரது மனைவி சுதா, நெல்லை அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களது மகன்கள் கார்த்திக் (14), மகேஷ் (12). நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மகேஷ், தொட்டில் சேலையில் ஊஞ்சல் ஆடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை அவனது கழுத்தை இறுக்கியது. இதில் தொங்கிய நிலையில் கிடந்த சிறுவனை பக்கத்து வீட்டார் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

தகவலறிந்த பேட்டை எஸ்ஜ சுந்தரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.