7 வயது சிறுமியை கொடூரமாக சிதைத்த காமுகன் -பரபரப்பு வாக்குமூலம்
1 min read3.7.2020
Youth arrested for brutally mutilating girlபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ஏம்பல் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் நாகூரான்(65). இவரது 3வது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகளான 7 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
கடந்த 29ம் தேதி இரவு மாயமான சிறுமி நேற்று முன்தினம் மாலை ஏம்பல் கிளவிதம்மம் ஏரியில் காட்டாமணக்கு செடிகளுக்குள் உடலில் கடித்து குதறிய காயங்களுடன் கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதுபற்றி ஆடு மேய்க்க சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் ஏம்பல் போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் புதுக்கோட்டை எஸ்.பி., அருண்சக்திகுமார் விசாரணை நடத்தினார். அதில், சம்பவத்தன்று இரவு வழக்கமாக அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு பூ கொடுக்க சென்ற சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜா (35) உடன் சிறுமியை அழைத்து வந்ததை பார்த்ததாக கோயில் பூசாரி தெரிவித்தார்.
இதையடுத்து ராஜாவை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. விசாரணையில் ராஜா அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: கடந்த 29ம் தேதி பூக்கடைக்காரரான ராஜா வழக்கம்போல் வீட்டிலிருந்து 300 கி.மீட்டர் தூரத்தில் உள்ள காளி கோயிலுக்கு பூ கொடுக்க சென்றுள்ளார். அப்போது வாசலில் நின்ற சிறுமியை பார்த்த அவர், கோயிலுக்கு போவதாகவும், வந்தால் பொங்கல் வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி சிறுமியையும் உடன் அழைத்து சென்றுள்ளார். கோயிலுக்கு சென்று பூ கொடுத்துவிட்டு 2 பேரும் திரும்பியுள்ளனர். இதை கோயில் பூசாரி, அதே பகுதியை சேர்ந்த பழனிமுத்து உள்பட சிலர் பார்த்துள்ளனர்.
சிறுமியை அழைத்து வந்த ராஜாவுக்கு சபலம் ஏற்பட்டதால் அவர் சிறுமியை ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை வெறித்தனமாக பல இடங்களில் கடித்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, வலியால் துடித்த சிறுமி சத்தம் போட்டதால் அப்பகுதியினர் யாராவது வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில், அருகில் கிடந்த வேலிகருவை தூரை எடுத்து அடித்து, உடலில் முகம், மர்ம பகுதி உள்ளிட்ட பல இடங்களில் குத்தியதுடன், கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், சிறுமியை தூக்கி சென்று காட்டாமணக்கு செடிகள் நிறைந்த ஏரியில் வீசிவிட்டு ராஜா வீட்டுக்கு சென்று ஒன்று தெரியாததுபோல் வேலைகளை செய்துள்ளார்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ராஜா மீது போக்சோ சட்டம், பலாத்காரம், கொலை செய்தல், தடயங்களை மறைத்தல், வன்கொடுமை சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிறுமி படுகொ–லையை கண்–டித்–தும் குடுமபத்துக்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஏம்பல் பஸ் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க முதல்–வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.