சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் போலீஸ்காரர் முத்துராஜ் கைது
1 min readSathankulam case-Police Muthuraj arrested
4-7-2020
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை-மகன் இறந்த வழக்கில் தேடப்பட்ட போலீஸ்காரர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை-மகன் கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் போலீஸ் காவலில் இறந்தனர். அவர்களை போலீசார் அடித்துக் கொன்றதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனை மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக விசாரணைக்கு எடுத்தக் கொண்டது. இதனை அடுத்து இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க சிபிசிஐடி க்கு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து சி.பி.சி.ஐ.டி பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று விசாரணை நடத்தியது. அவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
கைது
இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் முத்துராஜ் தூத்துக்குடி அரசன்குளத்தில் சிபிசிஐடி போலீசாரால் நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார். முத்துராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முத்துராஜ் கோர்்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 17 -ந் தேதி வரை காவலில் பைக்ப்பட்டார்.