May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்காக 7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி; அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

1 min read
Federal Government authorizes 7 paranormal medical research for Corona; Minister Pandiyarajan

11-7-2020
கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

பாண்டியராஜன் பேட்டி

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. அதேநேரம் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனாவை சித்த மருத்துவம் மூலம்
குணமாக்க முடியும் என்று சித்த வைத்தியர்கள் கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில் சித்த மருத்துவமனை அதிகாரிகளுடன் அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் கூறியதாவது:-

தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனை நிரூபிக்க ஐகோர்ட்டு அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது.

80 சதவீதம் அடைந்துள்ளனர்

தண்டையார்பேட்டை மண்டலத்தில் இதுவரை 80 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

பிற மாவட்டங்களிலும் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.