நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 7 பேர் பலி
1 min readநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 24 மணி ேநரத்தில் 7 பேர் பலி
Corona kills 7 in Tirunelveli, Tuticorin and Tenkasi13.7.2020
நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதேபோல் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்னர் வரை நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஒவ்வொரு நாளும் ஓரிரு உயிரிழப்பு என இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றுவரை 19 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்தனர். இந்நிலையில் மேலப்பாளையம் புகாரி தங்கல் தெருவை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் கொரோனா பாதிப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதேபோல் நெல்லை அருகே ராமையன்பட்டியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்தார்.
இதுபோல் பாளை கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த 24 வயது வாலிபர், மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவரின் 63 வயதான தந்தை, திசையன்விளையைச் சேர்ந்த 50 வயதான வியாபாரியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். கொரோனா பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த 72 வயதான முதியவர் ஒருவரும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கோவில்பட்டி சீனிவாச அக்ரஹார பகுதியைச் சேர்ந்த 59 வயது முதியவரான பிளம்பருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக கடந்த வாரம் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தியதில் கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அவர் கோவில்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சலும், மூச்சுத்திணறலும் இருந்தது. உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்தார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
===