May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 31-ந் தேதி வரை பொது போக்குவரத்து தடை நீடிப்பு

1 min read
Extension of public transport ban in Tamil Nadu till Julai 31st

13-7-2020

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வருகிற 31-ந் தேதி வரை பொது போக்கு வரத்து தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து தடை

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பொதுபோக்குவரத்துக்கு வருகிற 15-ந் தேதி தடை செய்யப்பட்டு இருந்தது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அங்கும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது.

நீடிப்பு

இதனால் பொது போக்குவரத்துக்கான தடையை வருகிற 31-ந் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக
தமிழக அரசு இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 31-ந்தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.