ஆபத்தான உயிரி ஆயுதங்களை தயாரிக்க சீனா-பாகிஸ்தான் ஒப்பந்தம்; புலனாய்வு பத்திரிகையாளர் சொல்கிறார்
1 min read
China-Pakistan agreement to produce dangerous biological weapons
25-7-2020
ஆபத்தான உயிரி ஆயுதங்களை தயாரிக்க சீனாவும் பாகிஸ்தானும் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக புலனாய்வு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
சீனா
சீனாவால் பல்வேறு நாடுகளுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. கொரோனா வைரசை அவர்கள்தான் உலகம் எங்கும் பரப்பினார்கள் என்பது அமெரிக்கா உள்பட பல நாடுகளின் குற்றச்சாட்டு. தற்போது இந்தியா எல்லைக்குள் புகுந்து சண்டைக்கு வழிவகுத்தார்கள். சீனாவுக்கு எதிராக, இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவீடன் போன்ற நாடுகளும் போக்கொடி தூக்கியுள்ளன. ஆனாலும் பாகிஸ்தான் சீனாவுக்கு கைப்பிள்ளையாக விளங்கு வருகிறது.
உயிரி ஆயுதம்
இந்த நிலையில், சீனாவானது அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் எதிர்ப்புகளை சமாளிக்க உயிரி ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, புலனாய்வு பத்திரிகையாளர், அந்தோணி கிளான் கூறியுள்ளார். அவர் ‘கிளாக்சன்’ என்ற இணையதளத்தில் எழுதியிருப்பதாவது:-
ரகசிய ஒப்பந்தம்
சீனாவின் “உஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி” ஆய்வகம், ‘டெஸ்டோ’ எனப்படும், பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புடன், ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட, ஆபத்தான உயிரி ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான ஆராய்ச்சியில், இருநாடுகளும் இறங்கியுள்ளன.
இதில், மிகவும் ஆபத்தான, ‘ஆந்தராக்ஸ்’ தொடர்பான ஆராய்ச்சி திட்டங்களும் அடங்கும். இதற்காக, உஹான் ஆய்வகம், பாகிஸ்தானுக்கு உதிரிபாகங்களை வழங்கியுள்ளது. பாகிஸ்தான், தன் சொந்த வைரஸ் சேகரிப்பு தரவுதளத்தை உருவாக்குவதற்காக, அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கு, நோய்க்கிருமிகளை கையாள்வது பற்றிய விரிவான பயிற்சியையும், உஹான் ஆய்வகம் அளித்துள்ளது.
சீனா – -பாகிஸ்தான் உயிரி ஆயுத திட்டத்தில், சி.சி.எச்.எப்.வி., எனப்படும், ரத்தக்கசிவு காய்ச்சல் வைரஸ் குறித்த சோதனை நடந்து வருவது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் எழுதி இருக்கிறார்