April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

போதைக்காக சானிடைசர் கலந்து மது குடித்த 7 பேர் சாவு

1 min read


7 people died after drinking alcohol mixed with sanitizer for intoxication

31-7-2020
ஆந்திராவில் போதைக்காக மதுவுடன் சானிடைசர் கலந்து குடித்த 7 பேர் இறந்தனர். மேலும் சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சானிடைசர்

கொரோனா பரவி வரும் இந்தக் காலத்தில் சானிடைசர் பற்றி கிராம மக்களுக்கும் தெரிந்துவிட்டது. கிருமி நம் கைகளில் தொற்றாமல் அந்த திரவத்தை தடவிக் கொள்வார்கள். தற்போது கொரோனா நம்மை தொற்றாமல் இருக்க அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதராத்துறை அறிவித்துள்ளது.

ஆனால் இந்த சானிடைசரை சிலர் போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் குரிசெடு கிராமத்தில், என்ற பகுதியில் போதைக்காக, மதுவுடன் சிலர் சானிடைசரை கலந்து குடித்தனர்.

7 பேர் சாவு

அப்படி குடித்ததில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இறந்தவர்களில் 3 பேர் பிச்சை எடுத்து பிழைப்பவர்கள் என்றும் , 4 பேர் குரிமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இப்படி மது குடித்த மேலும் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.