இந்து கடவுளை அவதூறாக பேசிய இயக்குனர் வேலு பிரபாகரன் கைது
1 min readDirector Velu Prabhakaran arrested for slandering Hindu God
31-7-2020
இந்து கடவுளை அவதூறாக பேசியதாக சினிமாம பட இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்து மதம் பற்றி அவதூறு
பெரியார் சொன்ன எத்தையோ கருத்துக்களில் ஒன்றுதான் கடவுள் மீதான நம்பிக்கை இல்லாமை. இந்த கொள்கையைத் தவிர்த்து பெரியாரின் சிந்தனைகள் பலருக்கு பிடிக்கும். ஏன் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கே அவரது பல கொள்கைகள் பிடிக்கும்.
ஆனால் தற்போது தன்னை பெரியாரின் தொண்டன் என்று சொல்லிக் கொண்டு இந்து மத கடவுளை மட்டுமே நிந்தனை செய்பவர்கள் பலர் உருவாகி வருகிறார்கள். அந்த வகையில் சினிமா இயக்குனர் வேலு பிரபாகரனும் ஒருவர். இவர் தன்னை ஈ.வெ.ரா.பெரியாரின் கொள்கையில் பிடிப்பு உள்ளவராகவும் காட்டிக் கொண்டு, இந்து மத கடவுள்களையும், மத நம்பிக்கைகளையும் கேவலமாக பேசி வருகிறார்.
கந்த சஷ்டி கவசத்தை இழிப்படுத்திய கறுப்பர் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த சுரேந்தரை ஆதரித்தும், இந்து மதத்தை மீண்டும் கேவலமாக பேசியும் பேட்டி கொடுத்துள்ளார். இதனால் இவர் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கைது
இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை
மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்தனர்.