April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் 55,079 பேருக்கு கொரோனா ; 799 பேர் சாவு

1 min read

In India 55,079 person Affected for corona and death799 oneday

31-7-2020

இந்தியாவில் ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 799 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

இந்தியாவில் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பரவல் பற்றி தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகர் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவல் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,38,871 பேராக உயர்ந்துள்ளது..
நேற்று ஒரே நாளில் 779 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,747 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் பரவி வந்தாலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 5,45,318 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாநிலம் வாரியாக…

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-

மராட்டியம் 4,11798 ( 14,729)

தமிழ்நாடு 2,39,978 ( 3,838)

டெல்லி 1,34,403 ( 3,936)

ஆந்திரா 1.30.557 (1,281)

கர்நாடகம் 1,18,632 (2,230)

குஜராத் 60,285 ( 2,418)

உத்தரபிரதேசம் 81,039 (1,536)

தெலுங்கானா 60,717(505)

மேற்குவங்காளம் 67,692 (1,536)

ராஜஸ்தான் 40.145 (663)

அரியானா 33,631 (413)

மத்திய பிரதேசம் 30,143 (843)

பீகார் 48,477 (282)

அசாம் 38,407 (94)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.