நயன்தாராவுடன் ஊர் சுற்ற முடியவில்லையே- விக்னேஷ்சிவன் ஆதங்கம்
1 min read
Unable to travel with Nayantara – Vigneshchivan
25-8-2020
கெரோனா ஊரடங்கால் நயன்தாராவுடன் ஊர்சுற்ற முடியவில்லையே என்று அவரது காதலர் விக்னேஷ் சிவன் வருத்தம் அடைகிறார்.
நயன்தாரா
திரை உலகத்திற்கு வந்து ஆண்டுகள் பல ஆனாலும் இன்னும் கவர்ச்சி குறையாமல் நடித்து வரும் நடிகை நயன்தாரா. சிம்புவையும் அடுத்து பிரபு தேவாவையும் காதலித்து பின்னர் விலகினார். அதன்பின் நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதல் கொண்டார். அந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும்போதுதான் அவர்களுக்குள் காதல் அரும்பியது.
சுற்றுப்பயணம்
அவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று காதல் வாழ்கையை அனுபவித்து வருகின் றனர். அந்த படங்களை அவ்வப்போது விகேனேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
கொரோனா ஊரடங்குக்கு முன்பாக இருவரும் நியூயார்க் நகருக்கு சென்று இருந்தனர். அங்கு காபி ஷாப் ஒன்றில் இருவரும் அமர்ந்திருக்கும் போட்டோவை விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் “பயணக்கள் சென்று அதிக காலமாகிவிட்டது. எல்லாம் இந்த கொரோனா தடையால்தான், கோரோனாவே போ, கொரோனாவே ஒடிப்போய்விடு, நியூயார்க் சிட்டியை மறக்கமுடியமா? அடுத்து ஊர் சுற்ற எப்போது தயார் ஆவது?” என்று குறிப்பிட்டு உள்ளார்.
நயன்தாரா உடன் ஊர் சுற்ற கொரோனா தடையாக இருக்கிறதே என்ற கவலைதான் விக்னேஷ் சிவனை இப்படி எழுத வைத்துள்ளது.
விஜய்சேதுபதியுடன், நயன்தாரா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அடுத்து இயக்குகிறார் விகேஷ் சிவன்.