கொரோனா பயம்-நண்பனுக்காக துடித்துப்போன விஜய்
1 min read26.8.2020
Vijay is excited for a friendவிஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ். இவர்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
பொது வேலைகளில் கூட இருவரும் வாடா போடா என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நண்பர்கள். இந்நிலையில் சமீபத்தில் சஞ்சீவ் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கொரானா என பயந்து விட்டாராம்.
உடனடியாக தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை அவர்களது அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு தனிமையில் இருந்துள்ளார். இந்த சமயத்தில் தளபதி விஜய் அவருக்கு போன் பண்ணி என்ன ஆயிற்று எனக் கேட்டுள்ளார்.
தனக்கு கொரானா வந்து விட்டதோ என பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சாப்பாட்டுக்கு என்ன பண்ண போகிறாய் என கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் விஜய்.
இந்நிலையில் திடீரென தன்னுடைய வீட்டில் இருந்து தானே தன்னுடைய காரில் சாப்பாடு எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்று கொடுத்துள்ளார். நண்பனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறாராம்.
இதனை சஞ்சீவ் சமீபத்திய நேரடி பேட்டியில் தெரிவித்துள்ளார்.