May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரேநாளில் 5,697 பேருக்கு கொரோனா; 5.735 டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 5,697 people in one day in Tamil Nadu; 5.735 Discharge

15-9-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதே நேரம் 5.735 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று பற்றி தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று( செவ்வாய்க்கிழமை) 5,697 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 5,687 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 10 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 170 ஆய்வகங்களில் 80,623 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 60 லட்சத்து 48 ஆயிரத்து 832 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா உறுதியானவர்களில் 3,484 பேர் ஆண்கள். 2,213 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,09,838. பெண்களின் எண்ணிக்கை 2,04,341. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,735 பேர் கொரேனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 900 ஆக உள்ளது.

68 பேர் சாவு

கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 68 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 40 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 28 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 8,502 பேர் இறந்துள்ளனர்.
தற்போது 46,806 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகள் 22 ஆயிரத்து 118 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 24 ஆயிரத்து 933 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 67 ஆயிரத்து 157 பேர்.

சென்னையில்

சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் இதுவரை 1,50,572 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர இன்று கோவையில் 485 பேருக்கும், செங்கல்பட்டில் 324 பேருக்கும், சேலத்தில் 292 பேருக்கும், திருவள்ளூரில் 283 பேருக்கும், கடலூரில் 268 பேருக்கும், திருப்பூரில் 262 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 198 பேருக்கும், திருவண்ணாமலையில் 189 பேருக்கும்
திருநெல்வேலி மாவட்டத்தில் 117 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 56 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 84 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இன்று சென்னையில் 12 பேரும், சேலத்தில் 9 பேரும், கடலூர், திருவள்ளூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, கோவையில் தலா 4 பேரும், தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், வேலூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருச்சி, விருதுநகரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,530 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,37,685 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கடலூரில் 523 பேரும், கோவையில் 437 பேரும், திருப்பூரில் 291 பேரும், திருவள்ளூரில் 268 பேரும், செங்கல்பட்டில் 236 பேரும், திருவண்ணாமலையில் 211 பேரும், சேலத்தில் 166 பேரும், விழுப்புரத்தில் 161 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.