எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம்செய்யும் மசோதா நிறைவேற்றம்
1 min readPassage of a bill that would favor 30 per cent of MPs’ salaries
15-9-2020
கொரோனாவால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம்செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.
நிதி நெருக்கடி
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதை சரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஒரு ஆண்டிற்கு, பாராளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி.க்களின்) சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, 1954ம் ஆண்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்றும் பென்ஷனுக்கான சட்டத்தில், திருத்தம் செய்ய வேண்டும் என்பதால், அதற்கான ஒப்புதலை, மத்திய மந்திரிசபை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வழங்கியது.
நிறைவேற்றம்
இந்த நிலையில் பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று(திங்கட்கிழமை) கூடியது. அடுத்த ஒரு ஆண்டிற்கு எம்.பி.,க்களின் சம்பளத்தில் இருந்து, 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்குவதற்கான மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரக்லாத் ஜோஷி தாக்கல் செய்தார்.
இந்த மசோதா இன்று(செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தில் நிறைவேறியது.