May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு மேலும் 2 எம்.பி. சாவு

1 min read

2 more MP death for Corona

16-9-2020

கொரோனாவுக்கு வசந்தகுமார் எம்.பி. இறந்ததை அடுத்து மேலும் 2 எம்.பி. மரணம் அடைந்துள்ளனர்.

வசந்தகுமார் எம்.பி.

இந்தியா முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் எம்.பி.க்களையும் அது விட்டு வைக்கவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. எம்.எல்.ஏ.வான அன்பழகன் முதன்முதலில் கொரோனாவுகு இறந்தார்.
அதன்பின் கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான வசந்தகுமார் கடந்த மாதம்( ஆகஸ்டு) 28-ந் தேதி கொரோனாவால் இறந்தார். இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்.பி. இவர்தான்.

திருப்பதி எம்.பி.

இந்த நிலையில் திருப்பதி தொகுதி எம்.பி.யும் கொரோனாவுக்கு இறந்தார். ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதி எம்.பியாக இருந்து வந்தனர் பல்லி துர்கா பிரசாத் ராவ் (வயது 63). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருக்கு கடந்த மாதம் 14-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று( புதன் கிழமை) மாலை 6.10 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
ஆனால் கடைசியாக எடுக்கப்பட்ட சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா எம்.பி.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு எம்.பி. கொரோனாவுக்கு இறந்தார். அவரது பெயர் அசோக் கஸ்தி (வயது 55). பாரதீய ஜனதா தலைவரானஇவர் பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக இருந்து வந்தார்.
இவர் கடந்த ஜூன் மாதம்தான் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக கடந்த வாரம் ‘மனிபால்’ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான சுவாச பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் இறந்தார்.

மரணம் அடைந்த அசோக் கஸ்திகல்லூரி காலத்திலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டவர். 1990-ம் ஆண்டு முதல் பாரதீய ஜனதாவில் இருந்தார். பெல்லாரி மற்றும் ராய்ச்சூரில் கட்சியை வளர்த்தவர்களில் இவர் முக்கியமானவர். பாரதீய ஜனதாவில் இளைஞரணி, வழக்கறிஞர் அணி, பொதுச் செயலாளர் போன்ற பதவிகளில் இருந்துள்ளார்.

3 ஆனது

நேற்றும் இன்றும் இறந்தவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 3 எம்.பி.க்கள் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.