May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 86,508 பேருக்கு கொரோனா

1 min read

86,508 person affected for corona all over india oneday

24/9/2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ) ஒரே நாளில் 86, 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா

இந்தியாவில் கொரேனா நிலவரம் பற்றிய விவரங்களை தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட விவரங்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் ஒரே நாளில் 86, 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57 லட்சத்து 32 ஆயிரத்து 519 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1,129 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோானாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,149 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்

கொரோனா பாதித்தவர்களில் நேற்று மட்டும் 87,374 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 46 லட்சத்து 74 ஆயிரத்து 988 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தற்போது 9,66,382 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று(வியாழக்கிழமை) மட்டம் 11,56,569 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவைகளையும் சேர்த்து இதுவரை 6 கோடியே 74 லட்சத்து 36 ஆயிரத்து 031 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.