May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 5,516 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

1 min read

In Tamil Nadu, 5,516 people recovered from Corona in one day

1/10/2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மீண்டனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இன்று( வியாழக்கிழமை) மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் 5,688 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5,683 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 5 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரத்து 290 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 187 ஆய்வகங்களில் 87,647 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 74 லட்சத்து 41 ஆயிரத்து 697 மாதிரிகள் பரிசோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,400 பேர் ஆண்கள். 2,288 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,64,129. பெண்களின் எண்ணிக்கை 2,39,130 . மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 31.

டிஸ்சார்ஜ்

கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,516 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 335 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் கொரோனாவுக்க இறந்துள்ளனர். இதில் 39 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 27 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,586 ஆக உள்ளது.

தற்போது 46,369 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில்…


சென்னையில் இன்று மட்டும் 1,289 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம் 1,68,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் 550 பேருக்கும், செங்கல்பட்டில் 356 பேருக்கும், சேலத்தில் 341 பேருக்கும், திருவள்ளூரில் 260 பேருக்கும், தஞ்சாவூரில் 232 பேருக்கும், திருப்பூரில் 192 பேருக்கும், கடலூரில் 180 பேருக்கும், வேலூரில் 149 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கும், ஈரோடில் 145 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

நெல்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் 86 பேருக்கும், தென்காசியில் 49 பேருக்கும் தூத்துக்குடியில் 75 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

இன்று சென்னையில் 18 பேரும், கோவையில் 8 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், திருப்பத்தூரில் 4 பேரும், ராணிப்பேட்டை, சேலம், திருச்சியில் தலா 3 பேரும், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர், வேலூரில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், தென்காசி, திருவாரூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 1,000 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனார்கள். சென்னையில் மொத்தம் 1,53,846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனார்கள்.
கோவையில் 511 பேரும், செங்கல்பட்டில் 474 பேரும், சேலத்தில் 378 பேரும், திருவள்ளூரில் 236 பேரும், கன்னியாகுமரியில் 186 பேரும், திருப்பூரில் 169 பேரும், கடலூரில் 162 பேரும், காஞ்சிபுரத்தில் 152 பேரும், ஈரோடில் 150 பேரும், விழுப்புரத்தில் 147 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.