ஒரு மீனால் லட்சாதிபதியான மூதாட்டி
1 min readOld leady gets Rs. Got 3 lakh for big fish
1/10/2020
ராட்சத மீனை பிடித்த மூதாட்டி அதை விற்று ஒரே நாளில் லட்சாதிபதி ஆனார்.
ராட்சத மீன்
மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவில் வசித்து வருபவர் புஷ்பாகர். மூதாட்டியானஇவர் மீன் பிடித்து அதை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
அந்த மூதாட்டி சம்பவத்தன்று ஆற்றில் மீன் பிடிக்கும்போது ராட்சத மீன் ஒன்று கிடைத்தது. அந்த மீன் போலா என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 52 கிலோ எடை கொண்டது. படகு மோதியதில் இந்த மீன் இறந்திருக்கலாம் என்றும் அதனால் அது மூதாட்டி வலையில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அந்த மீனை அதை கஷ்டப்பட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
அந்த மீனுக்கு கடும் கிராக்கி. ஒரு கிலோ ரூ 6,200 க்கு விலை போனது. இதனால் அந்த மூதாட்டிக்கு ஒரே நாளில் ரூ 3 லட்சம் கிடைத்தது. இது பற்றி அந்த மூதாட்டி கூறும்போது, நான் இவ்வளவு பெரிய மீனை நான் பார்த்ததே இல்லை.” என்று கூறியுள்ளார்.