நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா நிலவரம்
1 min readCorona situation in Nellai, Tenkasi and Thoothukudi districts
2/10/2020
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
நெல்லை
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12882 ஆக உயர்ந்துள்ளது. இன்று 114 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர். இதுவரை மொத்தம் 11817 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது இந்த மாவட்டத்தில் 866 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று பலி இல்லை என்பதால்கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 199ஆக உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7411 ஆக உயர்ந்துள்ளது. இன்று 42 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 6879 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 392 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவுக்கு ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களி எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13567 ஆக உயர்ந்துள்ளது. இன்று 77 பேர் கொனோராவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 12928 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது மொத்தம் 517 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இந்த மாவட்டத்தில் இன்று பலி இல்லை என்பதால், கொரோனாவுக்கு இறந்தவர்களின் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக உள்ளது.