தமிழகத்தில் இன்று 5,603 பேர் கொரோனவில் இருந்து மீண்டனர்
1 min readIn Tamil Nadu today 5,603 people recovered from Corona
2/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,603 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. இன்று ( வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) புதிதாக 5,595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,08,885 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 67 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9,653 ஆக அதிகரித்துள்ளது.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,603 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா
பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.52 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,294 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தவலை தமிழக சுகாதாரத் துறைஅறவித்துள்ளது.
இந்தியா முழுவதும்
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (வியாழக்கிழமை) 81,484 பேருக்கு
ரோனா உறுதி செய்ய்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து 63 லட்சத்து 94 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று மட்டும் 1,512 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 99,773 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று 78,877 பேர் குணம் அடைந்துள்ள நிலையில் மொத்தம் 53 லட்சத்து52 ஆயிரத்து 78 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தற்போது 9 லட்சத்து, 42 லட்சத்து 217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.