May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பயிற்சியில் ஈடுபட்ட கடற்படை கேப்டன் பலி

1 min read

Navy captain killed in paragliding exercise

3/10/2020

பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கடற்படை கேப்டன் திடீர் விபத்தில் சிக்கி இறந்தார்.

கேப்டன்

கர்நாடக மாநிலம் கார்வார் கடற்கரையில் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை கேப்டன், திடீர் விபத்தில் சிக்கி பலியானது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதுசூதன் ரெட்டி, தனது குடும்பத்துடன் கார்வார் துறைமுகத்துக்கு சென்றார். அங்கு பயிற்சியாளர் உதவியுடன் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இறந்தார்

வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கிளைடரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்தது.
பாராகிளைடரில் இருந்து விழுந்த இருவரையும், அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர்.

பயிற்சியாளர் காயமேதுமின்றி தப்பித்த நிலையில், மதுசூதன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.