பயிற்சி விமானம் கீழே விழுந்து 2 வீரர்கள் மரணம்
1 min readplane crashes, killing 2 soldiers
4/10/2020
திருவனந்தபுரம் கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் நொறுங்கியதில் 2 வீரர்கள் மரணம் அடைந்தனர்.
பயிற்சி
திருவனந்தபுரம் அருகே கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம், ஐ.என்.எஸ். கருடா கப்பலில் இருந்து கப்பற்படையினர் பயிற்சி மேற்கொள்வார்கள். அதன்படி ஐ.என்.எஸ். கருடா கப்பலில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்படி பயிற்சியில் ஈடுபட்டபோது காலை 7 மணியளவில், கடற்படை தளம் பக்கத்தில் தொப்பும்பாடி பாலம் அருகே நொறுங்கி விழுந்தது.
2 பேர் சாவு
இதில், பயிற்சி விமானத்தில் இருந்த லெப்டினன்ட் ராஜிவ் ஜா மற்றும் சுனில் குமார் ஆகியோர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் போகும் வழியிலேயே இறந்து போனார்கள்.
விபத்து குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.