அரியானா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம்
1 min readCollective rape of women in Haryana and Chhattisgarh
5/10/2020
உத்தரபிரசேத்தைப் போல் அரியானா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
தனியாக செல்லும் பெண்களை மடக்கி பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவம் இந்தியா முழுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. சில சம்பவங்கள் வெளியே தெரிந்து பரபரப்பபாகின்றன. அதில் சில சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டனை பெறுகிறார்கள். பல சம்பவங்களில் தப்பித்துவிடுகிறார்கள். இதுபோன்ற சில சமபவங்கள் மூடி மறைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டு விட்டது.
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அரியானா
இதேபோல் மேலும் சில சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அரியானா மாநிலம் குர்கானில் 25 வயது இளம்பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு குர்கானில் உள்ள சிக்கந்தர்பூர் மெட்ரோ நிலையம் அருகே 25 வயதுடைய பெண்ணை , டி.எல்.எப். ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் சந்தித்தார். அந்தப் பெண்ணை ஏமாற்றி அவர் வேலை பார்த்த அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். அங்கே அவருடன் மேலும் 3 பேர் இணைந்து அந்தப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களுடன் போராடிய அப்பெண்ணை சுவற்றில் தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் அந்தப் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே போலீசார் துரித நவடிக்கை எடுத்து சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே 4 பேரையும் கைது செய்தனர்.
கைதான 4 பேரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அதில் 3 பேர் டெலிவரி செய்யும் பணியில் உள்ளவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர்
இதேபோன்று இன்னொரு சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து உள்ளது. அந்த மாநிலம் கொண்டகாவன் மாவட்டத்தில் 34 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 1-ந் தேதி பனியாகான் என்னும் கிராமத்தில் இருந்து கொண்டகாவனுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். லாரியை கேஷ்கல் பள்ளத்தாக்கு பகுதிக்கு டிரைவர் பசந்த் பாகேல் (வயது 24) ஓட்டிச்சென்றார். அங்கு டிரவைரும் அவரின் உதவியாளர்கள் சந்தீப் குமார் (32), சஞ்சய் துர்கம் (20) ஆகியோரும் சேர்ந்து லாரியிலேயே அந்தப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்த தப்பிய அந்தப பெண் ராய்ப்பூர் சென்று அங்குள்ள மக்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அதன்பின் பொதுமக்கள் உதவியுடன் போலீசில் புகார் செய்தார். பலாத்காரம் செய்த டிரைவர் உள்டப 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.