May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 76,737 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

1 min read

In India, 76,737 people recovered from the corona one day

5/10/2020

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76,737 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மீண்டனர்.

கொரோனா

இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட வில்லை. கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( திங்கட்கிழமை ) வெளியிட்ட தகவல் வருமாறு:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 74,442 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 23 ஆயிரத்து 816 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று மட்டும் 903 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 685 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

மீண்டவர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 76,737 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை 55 லட்சத்து 86 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 9 லட்சத்து 34 ஆயிரத்து 427 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று கொரோனா பாதிப்பை விட குணமானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

பரிசோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிமை) ஒரே நாளில் 9,89,860 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுவரை இந்தியாவில் 7 கோடியே 99 லட்சத்து 82 ஆயிரத்து 394 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.