ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிப்பாதைக்கு திரும்பிய சென்னை அணி
1 min readIPL Chennai team returns to victory in cricket
4/10/2020
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட் ஐக்கிய அரபு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசஸ், பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ, ராஜஸ்தான் ராயல், டெல்லி கேப்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரேடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு சாம்பியன் மும்பை அணியுடன் மோதி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 3 போட்டிகளில் சென்னை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.
இன்று பஞ்சாப் அணியுடன் சென்னை அணி மோதியது. இதில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தனர்.
இதனை அடுத்து களம் இறங்கிய சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக சேன்வாட்சன், பாப் டு பிளசிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆரம்பம் முதலே இரண்டு வீரர்களும் அடித்து ஆடினார்கள். இதில் 14.4 ஓவர்களில் 181 ரன் எடுத்து விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்தனர்.
வெற்றியின் பாதை
இதில் வாட்சன் 83 ரன்னும் பிளசிஸ் 87 ரன்களும் எடுத்தனர். இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இவர்கள் இருவரும் 113 பந்துகளில் 181 ரன் எடுத்தனர். பிளசிஸ் இப்போது எடுத்ததையும் சேர்த்து மொத்தம் 5,500 ரன்கள் எடுத்துள்ளார்.
தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை அணி இப்போது வெற்றியின் பாதைக்கு திரும்பியுள்ளது.
முன்னதாக மும்பையும் சன் ரைசஸ் ஐதராபாத்தும் விளையாடியது. இதில் 34 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.