தமிழகத்தில் இன்று மட்டும் 5,558 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min readn Tamil Nadu today alone, 5,558 people have recovered from the corona
4/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,558 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மீண்டு டிஸ்சார்ஜ் ஆனார்கள்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தினமும் தமிழக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 5,489 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில், 5,482 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 189 ஆய்வகங்களில் 86,012 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 77 லட்சத்து 11 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3,322 பேர் ஆண்கள். 2,167 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,74,285 பெண்களின்எண்ணிக்கை 2,45,680. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 31 .
டிஸ்சார்ஜ்
கொரோனாவில் இருந்து இன்று 5,558 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 92 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 66 பேர் இறந்துள்ளனர். இதில் 37பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 29 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து
தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9,784 ஆக உள்ளது. . தற்போது 46,120 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
சென்னையில்…
சென்னையில் இன்று மட்டுமு் 1,348 பேருக்கு கொரோனாகண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 773 ஆகும்.
சென்னையைத் தவிர இன்று கோவையில் 474 பேருக்கும் செங்கல்பட்டில் 381 பேருக்கும், சேலத்தில் 357 பேருக்கும், தஞ்சாவூரில் 242 பேருக்கும், திருவள்ளூரில் 197 பேருக்கும், நாமக்கல்லில் 165 பேருக்கும், ஈரோடில் 149 பேருக்கும், திருவாரூரில் 148 பேருக்கும்,திருப்பூரில் 147 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 146 பேருக்கும்,கடலூரில் 141 பேருக்கும், வேலூரில் 140 பேருக்கும் கொரோனாஉறுதியாகியுள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் 71 பேருக்கும், தென்காசியில் 35 பேருக்கும், தூத்துக்குடியில் 53 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகி உள்ளது.
இன்று சென்னையில் 12 பேரும், கோவையில் 7 பேரும்,
செங்கல்பட்டில் 6 பேரும், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம்,
தென்காசி, திருவள்ளூர், திருச்சியில் தலா 3 பேரும்,
காஞ்சிபுரம், மதுரை, தேனி, திருப்பத்தூர், திருப்பூரில் தலா 2
பேரும், அரியலூர், கடலூர், தர்மபுரி,திண்டுக்கல், ஈரோடு,
கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, வேலூரில் தலா ஒருவரும்கொரோனாவால் இறந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1,374 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்யைில் இதுவரை மொத்தம்டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள்எண்ணிக்கை 1,57,216. இன்று தஞ்சாவூரில் 311 பேரும், சேலத்தில்306 பேரும், கோவையில் 301 பேரும், செங்கல்பட்டில் 297 பேரும்,திருப்பூரில் 241 பேரும், தர்மபுரியில் 188 பேரும், நாமக்கலில் 167 பேரும், நீலகிரி, திருவள்ளூரில் தலா 158 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.