May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இளம் பெண்ணுடன் பழகியதால் கல்லூரி மாணவர் கொலை

1 min read

College student murdered for getting acquainted with a young girl

10/10/2020

இளம் பெண்ணுடன் பழகிய கல்லூரி மாணவர் அந்தப் பெண்ணின் உறவினர்களால் கொலை செய்யப்பட்டார்

கல்லூரி மாணவர்

டெல்லியின் அதர்ஷ் நகரை சேர்ந்த வாலிபர் ராகுல் ராஜ்புத்(வயது 18) . இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் தனது வீட்டில் டியூசன் கற்றுக்கொடுத்தும் வந்தார்.

ராகுல் ராஜ்புத்திற்கும் அதே பகுதியில் வசித்துவரும் ஒரு இளம்பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ராகுல் அந்தப் பெண்ணிடம் பழகுவது அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.

கொலை

ஆனால் அவளுடன் ராகுல் தொடர்ந்து பேசிக் கொண்டிந்தார்.
கடந்த 7-ந் தேதி இரவு அதர்ஷ் நகர் தெருவில் அவர் இளம் பெண்ணுடன் பேசி கொண்டு சென்றார். இதனை கண்ட அந்த பெண்ணின் சகோதரன் உள்பட சிலர் ராகுலை இடை மறித்தனர். என் தங்கையுடன் ஏன் பேசுகிறாய் என்று அவளது சகோதரன் கேட்டார். இதில் ராகுல் ராஜ்புத்திற்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. அப்போது அந்த இளம்பெண்ணின் உறவினர்கள் ராகுல் ராஜ்புத்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராகுலை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், படுகாயமடைந்த ராகுல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கைது

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணின் சகோதரன் முகமது ராஜ் (20) மற்றும் உறவினர்கள் அன்வர் ஹசன் (20) உள்பட மொத்தம் 5 பேரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இறந்த ராகுலின் தந்தையை டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்க டெல்லி அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார். மேலும் ராகுலின் குடும்பத்திற்கு டெல்லி அரசு சார்பில் ரூ.10 இழப்பீடு வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.