தமிழகத்தில் இன்று 5,242 பேருக்கு கொரோனா
1 min readCorona for 5,242 people in Tamil Nadu today
10/10/2020
தமிழகத்தில் 5,242 பேருக்கு இன்று கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( சனிக்கிழமை) மட்டும் 5,242 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. உறுதியானது. இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 51 ஆயிரத்து 370 ஆக உள்ளது.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 5,222 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 44,150 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக்தில் இன்று மட்டும் 67 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையு் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு 10,187 பேர் இறந்துள்ளனர்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று 1,272 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 751 ஆகும். சென்னையைத் தவிர இன்று கோவையில் 392 பேருக்கும், சேலத்தில் 339 பேருக்கும், செங்கல்பட்டில் 309 பேருக்கும், திருவள்ளூரில் 199 பேருக்கும், தஞ்சாவூரில் 189 பேருக்கும், திருப்பூரில் 183 பேருக்கும், ஈரோடில் 161 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 160 பேருக்கும், நாமக்கலில் 153 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று 71 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 57 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் 23 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், கோவையில் 4 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூரில் தலா 3 பேரும், கடலூர், கிருஷ்ணகிரி, கரூர், திருவண்ணாமலையில் தலா 2 பேரும், காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விருதுநகரில் தலா ஒருவரும் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 1,173 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் இன்று 455 பேரும், தஞ்சாவூரில் 354 பேரும், சேலத்தில் 250 பேரும், திருவள்ளூரில் 229 பேரும், கோவையில் 216 பேரும், திருப்பூரில் 201 பேரும், வேலூரில் 167 பேரும், கடலூரில் 165 பேரும், காஞ்சிபுரத்தில் 143 பேரும், ஈரோடில் 129 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.