May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக அரசு பணியில் சேர வயது வரம்பு உயர்வு

1 min read

Raising the age limit to join the Tamil Nadu government service

10/10/2020

தமிழக அரசு துறையில் நேரடி பணியில் சேருவதற்கான வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது.

வயது வரம்பு

தமிழக அரசு பணிகளில் சிலவற்றுக்கு, நேரடியாக நியமனம் நடக்கிறது. இந்தப் பணிகளில் சேர, குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக 10ம் வகுப்புவரைதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் கூடுதல் கல்வித் தகுதி இருக்கக் கூடாது.
அதேபோல, இப்பணியில் சேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்ச வரம்பு 30 ஆக இருந்தது.

உயர்வு

தற்போது, வயது உச்ச வரம்பை, 32 ஆக உயர்த்தி, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை, அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணை வெளியிட்டதற்காக, தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு தலைவர்சேம.நாராயணன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.