நெல்லை தச்சநல்லூரியல் ஒருவர் கொலை; 4 பேர் சரண்
1 min readOne person kiled Thachanaluur near Nellai; 4 people surrender
23/10/2020
நெல்லை
தச்சநல்லூரில் குடும்பத்தகராறு காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் சரண் அடைந்துள்ளனர்.
அண்ணன்-தம்பி
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் வட்டக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி (வயது 55). இவர் தம்பி சண்முகவேலு அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர்கள் இரு குடும்பத்துக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ( புதன் கிழமை) தச்சநல்லூர் வட்டக்கிணறு பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சுடலைமணி நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
4 பேர் சரண்
இந்த கொலை வழக்கு தொடர்பாக சுடலை மணியின் தம்பி சண்முகவேலு மகன் முத்துக்குமார் (22) மற்றும் இவரது நண்பர்கள் ராம் சூர்யா (20), தேவேந்திரன் (19), ஹரிகரன் (20) ஆகிய 4 பேர் மானூர் புறநகர்காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.