May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

பவுர்ணமியில் சிவபூஜை செய்து பலன் காணலாம்

1 min read

Siva Pooja in full moon day

புரட்டாசி மாதம் வரும் வளர்பிறை சதுர்தசி அன்று சிவன் கோயில்களில் நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டு தரிசனம் செய்வது சிறப்பு.
இந்த ஆண்டு இந்த மாதம் 30-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) காலையில் காலையில் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். அன்று இரவு பவுர்ணமி. சிவன்கோவிலுக்கு சென்றும் வழிபடுங்கள். மறுநாள் காலையிலும் பவுர்ணமி இருப்பதால் குளித்துவிட்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் 16 பிராமணர்களுக்கும், 16 பெண்களுக்கும் எண்ணெய் கலக்காத உணவு கொடுக்க வேண்டும்.
இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் பால் மட்டுமே குடித்து வேறு உணவை உட்கொள்ளக் கூடாது. இப்படி விரதம் இருந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
இந்த பவுர்ணமி நாளில் சாதுர்மாஸ்ய வரதம் இருக்கும் சன்னியாசிகளை தரிசித்தால் நம் பாவங்கள் அனைத்தும் விலகி புண்ணியம் கிடைக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.