தியேட்டர்களில் புதிய படங்களை வெளியிட பாரதிராஜா திடீர் நிபந்தனை
1 min read
Bharathiraja’s condition to release new films in theaters
2/11/2020
வி.பி.எப் கட்டணத்தை செலுத்தாவிட்டால் தியேட்டர்களில் புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழ்நாட்டிலும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சினிமா தியேட்டாகளை திறக்க அனுமதி அளித்தார். அதாவது வருகிற 10-ந் தேதி முதல் உரிய கட்டுப்பாடுகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்கலாம் என்று கூறினார்.
வி.பி.எப். கட்டணம்
இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் வி.பி.எப் என்ற திரைப்பட ஒளிபரப்பு கட்டணத்தை செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும். ஒரே ஒரு முறை வி.பி.எப் கட்டணத்தை செலுத்தும் முறைக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே படங்களை வெளியிடுவோம் என அவர் கூறியுள்ளார்.