May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

பதவி ஏற்ற 3-வது நாளில் பீகார் மந்திரி ராஜினாமா

1 min read

Bihar minister resigns on 3rd day of charge

19/11/2020

பீகார் கல்வி மந்திரி மேவாலால் சவுத்ரி தான் பதவி ஏற்ற 3 நாளில் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பீகார் மந்திரி

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி வெற்றது. இதனை அடுத்து கடந்த 16 -ந் தேதி நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதில் கல்வி மந்திரியாக மேவாலால் சவுத்திரி பொறுப்பேற்றார்.

ராஜினாமா

மேவாலால் சவுத்திரி பதவி ஏற்ற மூன்றாவது நாளில் ( இன்று ) பதவியை ராஜினாமா செய்தார்.
மேவாலால் சவுத்திரி முன்பு விவசாய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தார். அப்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

மேவாலால் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார். இதனையடுத்து இன்று மேவாலால் சவுத்திரி, கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவரது ராஜினாமா பீகார் அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தேசிய கீதம் பாடத் தெரியாமல் மேவாலால் சவுத்ரி சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.