தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு கொரோனா
1 min readCorona for 1,442 people in Tamil Nadu today
27/11/2020
தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பற்றிய தகவல்களை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 1,442 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் 11 ஆயிரத்து 109 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 1,494 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளது.
12 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 681 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக…
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை
மாவட்ட வாரியாக வருமாறு:-
அரியலூர் – 10
செங்கல்பட்டு – 77
சென்னை – 392
கோவை – 145
கடலூர் – 32
தர்மபுரி – 16
திண்டுக்கல் – 29
ஈரோடு – 55
கள்ளக்குறிச்சி – 9
காஞ்சிபுரம் – 48
கன்னியாகுமரி – 31
கரூர் – 13
கிருஷ்ணகிரி – 13
மதுரை – 20
நாகை – 23
நாமக்கல் – 36
நீலகிரி – 11
பெரம்பலூர் – 1
புதுக்கோட்டை – 9
ராமநாதபுரம் – 10
ராணிப்பேட்டை – 11
சேலம் – 76
சிவகங்கை – 12
தென்காசி – 11
தஞ்சாவூர் – 25
தேனி – 9
திருப்பத்தூர் – 17
திருவள்ளூர் – 59
திருவண்ணாமலை – 9
திருவாரூர் – 16
தூத்துக்குடி – 12
திருநெல்வேலி – 30
திருப்பூர் – 60
திருச்சி – 28
வேலூர் – 47
விழுப்புரம் – 25
விருதுநகர் – 15
மொத்தம் – 1,442