தடையை மீறி திருவண்ணாமலை தீபத்தை மலை ஏறி தரிசித்த நடிகை
1 min read
Actress who climbed the Thiruvannamalai Deepam and climbed the mountain despite the ban
7/12/2020
திருவண்ணாமலை தீபத்தை தடையை மீறி மலைஏறி நடிகை சஞ்சனாஷெட்டி தரிசனம் செய்துள்ளார்.
திருவண்ணமலை தீபம்
திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம் மிகவும் பிரசித்துப்பெற்றது.
அந்த ஆண்டு கடந்த 29-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது. கோவில் அருகே 2.668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இந்த மகா தீபம் வருகிற 9-ந்தேதி( புதன்கிழமை) வரை காட்சி அளிக்கும்.
நடிகை
வழக்கமாக இந்த தீபத்தை மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரமணாக மலையில் ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் ஒரு நடிகை மலை உச்சிக்குச் சென்று தீபத்தை தரிசனம் செய்த காட்சி வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த நடிககையின் பெயர் சஞ்சிதா ஷெட்டி. இவர் சூது கவ்வும் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அவர் மலை ஏறி தீபத்தை தரிசனம் செய்ததை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர், திருவண்ணாமலை மலையேறியது உண்மையிலேயே அதிசயம். மலையின் உச்சியை அடைய 1 மணி 40 நிமிடங்களானது. ஆங்காங்கே ஓய்வெடுத்து கீழே இறங்க 2 மணி நேரம் 30 நிமிடங்களானது என்று பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் அவர் மகா தீபம் தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விசாரணை
பக்தர்கள் மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்தது குறித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மகா தீபத்தை காண பக்தர்கள் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நடிகை சஞ்சிதா ஷெட்டியை யார் மலைக்கு அழைத்து சென்றார்கள் என்பது தெரியவில்லை. இந்த ஊரைச் சேர்ந்த கைடு (வழிகாட்டி) மூலமாக தான் அவர் மலைக்கு சென்று இருப்பார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.