275 நாட்களுக்குப்பிறகு வெளியே வந்த மம்முட்டி
1 min readMammootty came out after 275 days
6/12/2020
கொரோனா காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நடிகர் மம்முட்டி 275 நாட்களுக்கப்பிறகு வெளியே வந்தார்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்பும் நடைபெறவில்லை. மேலும் பல நடிகர்கள் பாதுகாப்பு கருதி வீட்டைவிட்டு வெளியே வரவே இல்லை. கேரளாவில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கடந்த 9 மாதங்களாக வீட்டிலேயே இருந்தாராம்.
வெளியே வந்தார்
அவர் 275 நாட்களுக்குப்பிறகு இப்போதுதான் முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி, த பிரீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். அதன் பிறகு அவர் வெளியே வராமல் கொச்சியில் உள்ள தனது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்.
இப்போது வெளியே வந்த அவர் தனது வீட்டில் இருந்து காரில் கிளம்பி, நேராக மெரைன் டிரைவ் சென்றாராம். பின்னர் டீ கடைக்கு சென்று நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தபடி டீ குடித்துள்ளார்.
அவருடன் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், நடிகர் ரமேஷ் பிஷராடி, சினிமா தயாரிப்பு நிர்வாகி பாதுஷா ஆகியோரும் காரில் சென்றுள்ளனர். அவர் காரில் சுற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.