April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,009 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,009 people in Tamil Nadu today

28-12-2020
தமிழகத்தில் புதிதாக 1,009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (ஞாயிறு) புதிதாக 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள து. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,14,170 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 10பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,096 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,091 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,93,154 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 8,947 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வருமாறு:&

அரியலூர்- 3
செங்கல்பட்டு -67
சென்னை- 290
கோயம்புத்தூர் -94
கடலூர்- 15
தர்மபுரி- 14
திண்டுக்கல் -18
ஈரோடு- 37
கள்ளக்குறிச்சி -6
காஞ்சிபுரம் -35
கன்னியாகுமரி- 14
கரூர்- 12
கிருஷ்ணகிரி -12
மதுரை- 17
நாகப்பட்டினம் -17
நாமக்கல் -18
நீலகிரி- 12
பெரம்பலூர்- 1
புதுக்கோட்டை -5
ராமநாதபுரம் -4
ராணிப்பேட்டை -9
சேலம்- 37
சிவகங்கை -14
தென்காசி -9
தஞ்சாவூர்- 24
தேனி- 7
திருப்பத்தூர் -10
திருவள்ளூர்- 48
திருவண்ணாமலை -12
திருவாரூர் -10
தூத்துக்குடி- 6
திருநெல்வேலி -10
திருப்பூர் -40
திருச்சி -28
வேலூர் -25
விழுப்புரம் -10
விருதுநகர் -16

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.