ஆச்சரியம் ஆனால் உண்மை…. இந்தியாவில் மட்டும் உருமாறியது 19 வகை கொரோனா
1 min readSurprising but true …. only 19 types of corona evolved in India
1.1.2021
இந்தியாவில் மட்டும் இதுவரை 19 வகையாக கொரோனா உருமாறி மக்களை தாக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா
சீனாவில் உகான் மகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளையே கதிகலங்க வைத்து உள்ளது. இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டாலும் இன்னும் அதன் பலன் மக்களை சென்றடையவில்லை.
ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா, மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உருமாற்றம்
எந்த ஒரு வைரசும் பரவத் தொடங்கிய பின் பல்வேறு உருமாற்றங்களை அடையத்தான் செய்யும். ஆனால் உலக மக்களை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனாவின் உருமாற்றம் மக்களை என்னபாடுபடுத்துமோ என்றுதான் உலக ஆராய்ச்சியாளர்கள் பயந்தனர்.
எல்லா வைரசைப் போல கொரோனா வைரசும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. இதில் தற்போது இங்கிலாந்து நாட்டில் தோன்றியுள்ள உருமாற்ற கொரோனாதான் அதிவேகம் கொண்டது என்கிறார்கள். இது சாதாரண கொரோனாவைவிட 70 மடங்கு வேகத்தில் பரவும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் இதுவரை பல உருமாற்றங்களை இந்த கொரோனா கண்டுள்ளது. அதுபற்றிய விவரத்தை இங்கே காணலாம்.
இந்தியாவில் 19 வகை
இங்கிலாந்தில் அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டது. கொரோனா வைரசில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றம் காரணமாக இந்த புதிய வகை வைரஸ் உருவாகியிருப்பதாகவும், இந்த வைரஸ் 70 சதம் அதிகம் பரவும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது உலக நாடுகளை மேலும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஏற்கெனவே உருமாற்றம் அடைந்த 19 வகை கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலைச் (சிஎஸ்ஐஆர்) சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கருத்து பின்வருமாறு:-
மொத்தம் 133 நாடுகளில் கொரோனா வைரசின் மரபணு கோர்வையை ஆராய்ச்சி செய்ததில் மரபணு மாற்றம் அடைந்த 86 வகை கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை உடலில் உள்ள எதிர் பொருளை (ஆன்டிபாடி) எதிர்க்கும் திறன் கொண்டவை. இந்த 86 வகை வைரஸ்களில் 19 ரகங்கள் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளன. எனினும் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை. ஆனால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
கொரோனா வைரசில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, அதற்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படாது என்று அர்த்தம் கொள்ளவேண்டாம். வைரசின் வீரியத்தை தடுப்பூசிகள் குறைக்கும். தடுப்பூசிகளை பரிசோதிக்கும் வேளையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்யவேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
–