சிரஞ்சீவி அனுமன் ஜெயந்தி
1 min readHanuman Jeyanthi
11/1/2021
ராம பக்தனான அனுமன் இரண்டு யுகங்கள் வாழ்ந்தவர். ராமர் தனது அவதாரத்தை முடிக்குபோது தன்னோடு இருந்தவர்களை வைகுண்டத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். அவர் அனுமனையும் தன்னோடு வைகுண்டம் அழைத்தார். ஆனால் அனுமனோ நான் இந்த பூமியில் இருந்து தங்கள் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறினார். அதன்படி அடுத்த யுகத்திலும் கிருஷ்ண அவதாரத்தின் போதும் அனுமன், ராமபிரானின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார். மகாபாரத்திலும் அனுமன் வருவார். அதனால்தான் அனுமன் சிரஞ்சீவி என்ற சிறப்பை பெற்றார். அனுமன் ஜெயந்தி இந்த ஆண்டு 12.1.2021 செவ்வாய்க்கிழமை வருகிறது.