தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா
1 min readCorona for 549 people in Tamil Nadu today
20.1.2021
தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கொரோனா
இந்திய அளவில் கொரோனா தாக்கல் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் குறைந்து உள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று( புதன்கிழமை) 549 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,32,415 ஆக உள்ளது. தமிழகத்தில் உள்ள 252 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 60,249 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 53 லட்சத்து 91 ஆயிரத்து 518 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 336 பேர் ஆண்கள். 213 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,03,147. பெண்களின் எண்ணிக்கை 3,29,234. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34.
கொரோனா பாதித்தவர்களில் இன்று 713 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவைகளையும் சேர்த்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 14 ஆயிரத்து811ஆக உள்ளது.
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 9 பேர் இறந்துள்னர். இதில் 3 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 6 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிகப்பட்டவர்கள் ஆவர். சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், மதுரை, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவுக்க இறந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,290 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 5,314 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை, தென்காசி
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் அதிக பட்சமாக சென்னையில் 150 பேரை தாக்கியுள்ளது. நெல்லையில் 9 பேருக்கும், தென்காசியில் 9 பேருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய அளவில்….
இந்திய அளவில் நேற்று ( செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 13,823 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 5 லட்சத்து 95 ஆயிரத்து 660 ஆக உயர்ந்துள்ளது.