May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி கோவிலுக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள்

1 min read

slamists donate to Tirupati temple

20.1.2021

திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் 3 டன் காய்கறிகள் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

காய்கறிகள்

திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில் தினமும் அன்னதானம் நடந்து வருகிறது. தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு, பல ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், காய்கறிகள், மளிகை பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், சித்தூர் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் இணைந்து, ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு நேற்று, 3 டன் காய்கறிகளை நன்கொடையாக அனுப்பினர்.

‘பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இறைவனுக்கு வழங்குவதற்கு சமம். அதற்கு எங்களால் இயன்ற சிறு முயற்சி’ என்று நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள் கூறினார்கள்.

காணிக்கை

நேற்று முன்தினம்( திங்கட்கிழமை) திருமலை ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் நேற்று( செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டன. அதில், 3 கோடியே, 11 லட்சம் ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக, சராசரியாக 2 கோடி ரூபாய் வசூலாகி வந்த உண்டியல் காணிக்கை, நேற்று ஒரே நாளில், 3 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.