தமிழகத்தில் இன்று 596 பேருக்கு கொரோனா
1 min readCorona for 596 people in Tamil Nadu today
21/1/2021
தமிழகத்தில் இன்று புதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை ) புதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,33,011 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 166 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
9 பேர் சாவு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 9 பேர் இறந்துள்ளனர். அதாவது சென்னையில் 4 பேர், செங்கல்பட்டில் 2 பேர், காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்தனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,299 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 705 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 8,15,516 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 5,196 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று ஒரு நாளில் 61,023 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய அளவில்…
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) புதிதாக 15,223 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,10,883 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 151 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,52,869 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,965 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,65,706 ஆக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் தற்போது கொரோனாவுக்கு 1,92,308 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்தியா முழுவதும் இதுவரை 8,06,484 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.