கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி; – ஆஸ்பத்திரியில் அனுமதி
1 min readBack pain for cricketer Saurav Ganguly; – Admission to the hospital
27.1.2021
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக இருக்கிறார்.
48 வயதான கங்குலிக்கு ஏற்கனவே கடந்த 2-ந் தேதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது
இந்த நிலையில் கங்குலிக்கு இன்று(புதன்கிழமை) மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.