May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா இன்று 512 ஆக குறைந்தது

1 min read

In Tamil Nadu, the corona has dropped to 512 today

27.1.2021
தமிழகத்தில் கொரோனா பரவல் இன்று 512 ஆக குறைந்தது. இன்று கொரோனாவுக்கு 8 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

தமிழகத்தில் இன்று( புதன்கிழமை) 512 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,36,315ஆக உயந்துள்ளது. தமிழகத்தில் இன்று 254 ஆய்வகங்கள் மூலமாக 56,098 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்ற கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 305 பேர் ஆண்கள். 207 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,05,456.பெண்களின் எண்ணிக்கை 3,30,825. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று 564 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்து 306 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்தனர். இதில் சென்னையி 4 பேரும், ஈரோட்டில் 2 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா ஒருவரும் இறந்துள்ளன். இவர்களையும் சேர்த்து தமிகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,333 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,676 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் .

நெல்லை

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையி 159 பேரும் நெல்லையில் 5 பேரும், தென்காசியில் 7 பேரும், தூத்துக்குடியில் 3 பேரும் பாதிக்கப்பட்டனர்.

மேற்கண் தகவலை தமிழ்நாடு சுகாதராத்துறை கூறியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.