சினிமா தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கு மேல் அனுமதிக்கலாம்
1 min readMore than 50 percent may be allowed in movie theaters
27-.1.2021
இந்தியா முழுவதுமு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28&ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் – தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (புதன்கிழஐம) உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
சினிமா தியேட்டர்கள்
சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கண்டெய்ன்மெண்ட் சோன் எனப்படும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், உருமாறிய கொரோனா அச்சுறுத்தலாலே முன்னெச்சரிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.