May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 509 people in Tamil Nadu today

29.1.2021

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) 509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,37,327 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,345 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் இன்று ஒரே நாளில் 531 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8,20,381 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 4,601 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆந்திரா

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், அரசு மேற்கொண்ட தீவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது.
ஆந்திராவில் இன்று( வெள்ளிக்கிழமை) 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,87,591 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 7,152 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் தற்போது 1,308 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 8,79,131 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த தகவலை ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.