காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read3 terrorists shot dead in Kashmir
29.1.2021
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
பயங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அவந்திபோராவில் உள்ள மண்டூர டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் அடையாளம் தெரியாத 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும், தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.