தமிழகத்தில் இன்று 457பேருக்கு கொரோனா
1 min readCorona for 457 people in Tamil Nadu today
18/2/2021
தமிழகத்தில் இன்று 457பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 51 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இன்றைய கொரோனா பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) 457 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,46,937ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 255 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 51,101 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 269 பேர் ஆண்கள். 188 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,11,793. மொத்த பெண்களின் எண்ணிக்கை 3,35,109. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35. இன்று மட்டும் 470 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 320ஆக உள்ளது.
6 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 6 பேர் இறந்துள்ளனர். அதாவது சென்னையில் 4 பேரும், திருவள்ளூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இன்று இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,444 ஆக உயர்த்துள்ளது. தற்போது 4,173 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று சென்னையில் 138 பேருக்கும், கோவையில் 40 பேருக்கும் நெல்லையில் 8 பேருக்கும் தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 3 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.